ராஜராஜேஸ்வரி பாலசுப்ரமணியன்

சூரிய வணக்கம்

படுக்காமலே விழித்த,

உணராமலே புலர்ந்த,

கண்ணெதிரே மலர்ந்த,

பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே

அடிவானில் சிவந்து தோன்றிய

செங்கதிரோனே

உனக்கு என் காலை வணக்கங்கள்!